ஊரடங்கால் வருமானமில்லை – 3 மாத குழந்தையைக் கொன்ற தாய் கைது!

3 மாத குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா – யாஸ்மின் தம்பதியின் மூன்று மாத பெண் குழந்தை ஆகஸ்ட் 28ஆம் தேதி உயிரிழந்தது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சாதிக் பாஷா புகார் அளித்ததை தொடர்ந்து, குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் குழந்தைக்கு வழங்கப்பட்ட பாலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சாதிக்பாஷா – யாஸ்மின் தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், தனியார் பேருந்தில் நடத்துனராக உள்ள கணவர் சாதிக் பாஷா, ஊரடங்கால் வருமானமின்றி தவித்து வந்ததால், பாலில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து குழந்தையை கொலை செய்ததாக யாஷ்மின் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து யாஸ்மினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version