கரூரில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

கரூரில், திமுகவில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தளவாபாளையம் பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி ,போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அனைவருக்கும் சால்வை அணிவித்து, அதிமுகவிற்கு வரவேற்றார். கட்சியில் இணைந்த இளைஞர்கள் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Exit mobile version