300க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில், அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி, தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அனைத்து விஸ்வகர்மா சமூக சங்கத்தின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோவை பாபுஜி சுவாமிகள் தலைமையில், அச்சங்கத்தினர் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
 

Exit mobile version