சத்துவச்சாரியில் மாற்றுக் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். வேலூர் மாவட்டம் சத்துவச்சாரியில் உள்ள நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுக மாணவர் அணி செயலாளர் முன்னிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அனைவரும் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version