2லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் – தமிழ்நாடு சுகாதாரத்துறை!

கொரோனா தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தடுப்பூசி திருவிழாவின் இரண்டாம் நாளில் மட்டும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தினசரி இலக்கை விட 17 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி, 4 ஆயிரத்து 300 மையங்கள் மூலம் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு திறன் உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version