மருத்துவ முகாம்கள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் -உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கஜா புயல் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த முகாம்கள் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Exit mobile version