கோவையில் மஞ்சள், கரும்பு விற்பனை அமோகம் – வியாபாரிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் மஞ்சள் மற்றும் கரும்பு விற்பனை சூடு பிடித்து இருப்பதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் மஞ்சள், கரும்பு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஜோடி கரும்பின் விலை 100 ரூபாய் வரையிலும், 60 ரூபாய் வரையிலும் விற்பனையாவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொங்கலுக்காக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய், பண்டிகையை கொண்டாட உதவியாக உள்ளதாக கூறிய பொதுமக்கள், அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Exit mobile version