மிளகாய் சாகுபடியில் நல்ல லாபம்: விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மிளகாய் சாகுபடியில் நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில வருடங்களாக அதிகளவில் மிளகாய் பயிரிடப்படுகிறது.சாகுபடி செய்யப்படும் மிளகாய் நல்ல விலைக்குப் போவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் தமிழக அரசினால் வழங்கப்படும் இலவச மின்சாரம், மானிய விலை உரங்கள் மற்றும் இடு பொருட்களால் தங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள் தமிழக அரசுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

Exit mobile version