உத்தரபிரதேசத்தில் மஹா கும்பமேளா அதிக மக்கள் வருகை

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவிற்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் வருகை தரும் சமய விழா என்ற சிறப்பைப் பெற்றுள்ள மஹா கும்பமேளா கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. கடந்த இரண்டு வாரங்களாக அகோரிகள், ஹிந்து மத தலைவர்கள் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர். இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் வசதிக்காக உத்தரபிரதேச அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. 48 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் விழாவானது வரும் மார்ச் 3ஆம் தேதி நிறைவு பெற உள்ளது.

Exit mobile version