விவசாயத்திற்கு, வேலைவாய்ப்பிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் – மத்தியபிரதேச முதலமைச்சராக பதவியேற்க உள்ள கமல்நாத்

எங்களது ஆட்சியில் விவசாயத்திற்கு, வேலைவாய்ப்பிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்தியபிரதேச முதலமைச்சராக பதவியேற்க உள்ள கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்ததற்கு வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். விவசாயத்துறைக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் அரசு அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறினார்.

 

 

 

Exit mobile version