அதிமுக கூட்டணியில், தேமுதிக இணைந்தால் மேலும் மகிழ்ச்சி

அதிமுக கூட்டணியில், தேமுதிக இணைந்தால் மேலும் மகிழ்ச்சி என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அன்புமணி ராமதாஸ் திறந்துவைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தருமபுரி மாவட்ட மக்களின், 78 ஆண்டுகால கோரிக்கையான தருமபுரி -மொரப்பூர் ரயில்பாதை இணைப்பு திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், இதற்கான விழாவில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைக்க உள்ளதாக கூறினார்.

அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணியில் தேமுதிக இணைந்தால் மேலும் மகிழ்ச்சி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Exit mobile version