மூக்குபொடி சாமியார் 95 வயதில் சித்தி அடைந்தார்

திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல மூக்கு பொடி சித்தர் இன்று சித்தி அடைந்தார். அவரது உடலுக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற மூக்குபொடி சித்தர் 95 வயதில் திருவண்ணாமலையில் சித்தி அடைந்தார். அவரது உடல் கிரிவல பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இவரது உடல் அடக்கம் செய்யப்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கிழக்குராஜபாளையம் என்ற ஊரில் பிறந்த இவர், கடந்த 65 ஆண்டுகளாக கிரிவலபாதையில் வசித்து வந்தார். இவரின் சீடர்களாக பல பிரபலங்கள் இருந்தனர். இந்நிலையில் சித்தி அடையும் நோக்கில் சில நாட்களாக உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை அவர் தவிர்த்து விட்டார். இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை மூக்குபொடி சாமியார் சித்தியடைந்தார்.

 

Exit mobile version