மூடர் கூடம் திரைப்படத்தை இயக்கிய நவீனின் மூன்றாவது படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

மூடர் கூடம் திரைப்படத்தை இயக்கிய நவீனின் மூன்றாவது படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். மக்களின் வரவேற்பை பெற்ற மூடர் கூடம் திரைப்படத்தை நவீன் இயக்கினார். அதைத் தொடர்ந்து, அலாவுதீனும் அற்புத கேமராவும் என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மூன்றாவது படத்தை துவக்கியுள்ளார் நவீன். படத்திற்கு அக்னிச் சிறகுகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ஆன்டனி மற்றும் அருண் விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பை, உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். இந்தப் படத்தை டி. சிவா தயாரிக்கிறார்.

Exit mobile version