கேரளாவில் பருவமழை தீவிரம்: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளது. இதனால், இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணுர், எர்ணாகுளம், திரிசூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பிரனாய் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version