தினகரன் ஆதரவாளர்களிடம் இருந்து பணம் பறிமுதல்

கன்னியாகுமரி அருகே தினகரன் ஆதரவாளர்களிடம் இருந்து பணம் மற்றும் பணப்பட்டுவாடா ஆவணங்களை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே இக்னேசியஸ் சேவியர் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சென்ற சொகுசு காரை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த தினகரன் ஆதரவாளர் ரவி என்பவரிடமிருந்து49 ஆயிரத்து ஐநூறு ரூபாய் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர்.

ஆவணங்களில் தினகரன் கட்சி வாக்கு சாவடி பொறுப்பாளர்களுக்கு பணம் அளிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியல் மற்றும் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டவர்களின் கையெழுத்துடன் கூடிய ஒப்புகைச் சீட்டுகள் இருந்தன. இதையடுத்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Exit mobile version