மோடி வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர், ஆட்சியர் ஆய்வு

மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்படும் பகுதியை, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மதுரை மண்டேலா நகர் பகுதியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனையொட்டி, விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Exit mobile version