பிரதமர் உரையில் எவ்வித விதிமீறலும் இல்லை: காங்கிரஸ் புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

பிரதமர் மோடி உரையில் எவ்வித விதிமீறலும் இல்லை என காங்கிரஸ் புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது

நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீதும் பாஜக தலைவர் அமித்ஷா மீதும் காங்கிரஸ் கட்சி புகாரளித்தது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய விமானப்படையின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ் எம்.பி., உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு விசாரனைக்கு வந்த போது, தேர்தல் ஆனையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி உரையில் எவ்வித விதிமீறலும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version