நாட்டை பாதுகாக்க பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்

நாட்டை பாதுகாக்க பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர் மணிமாறனை ஆதரித்து, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பள்ளிப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ள நாயக்கன்பாளையம், கள்ளங்காட்டு வலசு, சடையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், நாட்டை பாதுகாக்க ஒரு வலிமையான தலைவர் வேண்டும் என்றும் அதற்காக பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என கூறினார். பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலையே எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருவதாக தங்கமணி விமர்சனம் செய்தார்.

Exit mobile version