ஒரே தேசம் – ஒரே அட்டை திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் மோடி

பொதுப்போக்குவரத்தில் ஒரே தேசம் – ஒரே அட்டை திட்டத்தை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் மூலம் தேசிய அளவில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் ஒரே அட்டையை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும். சுங்கச்சாவடிகளிலும் இந்த அட்டை மூலம் பணம் செலுத்தலாம். போக்குவரத்துத் துறை முழுவதையும் மின்னணு மயமாக்கும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தில் மெட்ரோ ரயில் கட்டணத்தையும், ரயில் நிலையங்களில் நடைபாதை கட்டணமும் செலுத்த முடியும்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, ஒரே தேசம் – ஒரே அட்டை திட்டத்தை துவக்கி வைக்கிறார். இதன்மூலம் பயணிகளுக்கு அவர்களது பயணம் மிகவும் எளிதாக அமையும் என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version