மோடி 2 நாள்களில் 6 மாநிலங்களில் சூறாவளி தேர்தல் சுற்றுபயண பிரசாரம்

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்களில் ஆறு மாநிலங்களில் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இன்று ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களிலும், நாளை ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் மிகப்பெரிய பேரணிக்கு பா.ஜ.க ஏற்பாடு செய்துள்ளது.

மீரட் உட்பட மேற்கு உத்தர பிரதேசத்தைச் சார்ந்த 8 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version