கேரள வெள்ள பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் 12 மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஹெலிகாப்டரில் வெள்ள சேதத்தை பார்வையிட்டனர். இந்தநிலையில், வெள்ள சேத பகுதிகளை பிரதமர் மோடி நாளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version