மோடி – அமித் ஷாவுக்கு இனி தூக்கம் வராது: மாயாவதி

உத்தரபிரதேசத்தை பயன்படுத்தி மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதை தடுக்க, ஒரேவழி ஒன்றிணைந்து எதிர்ப்பது தான் என்று மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக, மக்களவை தேர்தலில் வலுவாக கூட்டணி அமைக்க, எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மக்கள் நலனுக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டாக தெரிவித்தனர். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், காங்கிரசுடன் கூட்டணி வைப்பதில் ஒரு பலனும் இல்லை என்று தெரிவித்த அவர்கள், காங்கிரசும், பாஜகவும் ஊழல் கட்சிகள் தான் என்றனர். வரலாற்று கூட்டணி மூலம், மோடி மற்றும் அமித் ஷாவுக்கு இனி தூக்கம் வராது என்று மாயாவதி கூறினார்.

Exit mobile version