காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய அடையாளம் ஊழல் – மோடி

காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய அடையாளம் ஊழல் தான் என மத்தியபிரதேச தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மத்தியப்பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சத்தர்பூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணத்தை வருமான வரி மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை காங்கிரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறிய பிரதமர் மோடி, தனது தாயை விமர்சிப்பதன் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார்.

 

 

 

Exit mobile version