பிரதமர் மோடியின் அடுத்த மாத நேபால் சுற்று பயணம் ரத்து

பிரதமர் நரேந்திர மோடியின் நேபால் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த மாதத்தில் பிரதமர் மோடி நேபால் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது அவர் ஜெய் நகர் முதல் நேபாலின் ஜனக்புர்தம் இடையேயான ரயில் சேவையை துவக்கி வைப்பார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், மோடியின் நேரமின்மையின் காரணமாகவும் நேபால் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக நேபாலில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exit mobile version