பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ராமபோசா சந்திப்பு – இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிங்கப்பூரில் கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதனிடையே, குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று தெரிய வந்துள்ளது.

Exit mobile version