சத்தீஸ்கர் மிகச்சிறந்த மாநிலமாக உருவாக்கப்படும் – பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

சத்தீஸ்கர் மிகச்சிறந்த மாநிலமாக உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.  சத்தீஸ்கரில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்குள்ள ஜெகதல்பூரில் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

வறுமை ஒழிக்கப்படும் என்று உறுதியளித்த அவர், மக்கள் வாழ்வில் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனக் குறிப்பிட்டார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங் கொண்டுவந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டை கட்டையாக இருந்ததாக பிரதமர் குற்றம் சாட்டினார். காங்கிரஸின் பொய்யாட்சி அதிக நாட்களுக்கு நிலைக்காது என்றும் ஏழை மக்கள் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் மோடி குற்றம் சாட்டினார்.

 

Exit mobile version