வடபழனி, சென்னை நரம்பு சம்பந்தப்பட்ட பார்க்கின் சன்ஸ் நோய்க்கு நவீன சிகிச்சை

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்க்கின்சன்ஸ் நோய்க்கு இந்தியாவிலேயே முதன்முறையாக அப்போ பென் மற்றும் அப்போ பம்ப் மூலம் சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நரம்பு சம்பந்தப்பட்ட பார்க்கின் சன்ஸ் நோயின் தொடக்க நிலைக்கு, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாத நிலையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் குணப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிறிய ஊசி மூலம் நோயை குணப்படுத்தக்கூடிய அப்போ பென் மற்றும் அப்போ பம்ப் சிகிச்சை முறை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையும் இணைந்து அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலாளர் கிரன் குர்லா துவக்கி வைத்தார்.

Exit mobile version