பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த எம்.எல்.ஏ.

தமிழகம் முழுவதும் 3-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கோவை உக்கடம் அருகே மாணவர்களுக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ. பாடம் நடத்தியது அனைவரின் பாராட்டை பெற்றது.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி கெட்டுவிடக்கூடாது என்று தெரிவித்த அவர், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் உடனடியாக பாடம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version