திருச்சியில் காணாமல் போன நகைகள் மற்றும் பணத்தை காவல்துறையினர் ஒரே வாரத்தில் மீட்பு

திருச்சி மாவட்டத்தில் காணாமல் போன 25 சவரன் நகைகள் மற்றும் 31 லட்சம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் ஒரே வாரத்தில் மீட்டுள்னர்.

துறையூர் அருகே உள்ள நாகநல்லூரில் சுசிலா என்பவரின் வீட்டின் பீரோவை உடைத்து  கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி,   தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் கடன்சுமை காரணமாக நகைகள் மற்றும் பணத்தை திருடியதாக கீதா என்ற பெண் ஒருவர் குற்றத்தை  ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து,அவர் மறைத்து வைத்திருந்த 25 சவரன் நகைகள் மற்றும் 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட கீதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version