சிஏஏ குறித்து தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

என்.பி.ஆர் கணக்கெடுப்பிற்கு எந்த ஆவணங்களும் கட்டாயமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  சிஏஏ   சட்டமானது எந்த ஒருவருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல , மாறாக குடியுரிமை வழங்கும் சட்டம் ஆகும், எனவும்  கூறினார். அதே போன்று தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான என்.பி.ஆர்க்கு எந்த ஆவணங்களும் கட்டாயமில்லை எனவும், யாரும் என்.பி.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

Exit mobile version