சிஏஏ : மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க ஆலோசனை கூட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக  49 இஸ்லாமிய அமைப்பினருடன் , தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். மேலும், டிஜிபி திரிபாதி, மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் ஆகிய சட்டங்கள் குறித்து இஸ்லாமிய தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version