டெல்லி கலவரம் திட்டமிட்டே நடத்தப்பட்டது -மத்திய அமைச்சர் அமித்ஷா

டெல்லி கலவரம் திட்டமிட்டே நடத்தப்பட்டதென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக மக்களவையில் பேசிய அமித்ஷா, டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாக அமித்ஷா குற்றம்சாட்டினார். அப்பாவி பொதுமக்கள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமித்ஷா தெரிவித்தார். பிப்ரவரி 27 ஆம் தேதியில் இருந்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 100 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.

Exit mobile version