நாமக்கல் மருத்துவ கல்லூரிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

முதலமைச்சர் பங்கேற்க உள்ள நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான பூமி பூஜை முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான பூமி பூஜை  விழா வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த பூஜையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.

விழா நடைபெறும் இடமான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version