திருமலை நாயக்கரின் பிறந்ததினத்தையொட்டி அமைச்சர்கள் மரியாதை

மதுரையில் மன்னர் திருமலை நாயக்கரின் 436வது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ மற்றும் உதயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் கடந்த 2016 முதல் திருமலை நாயக்கரின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமலை நாயக்கரின் 436வது பிறந்ததினத்தையொட்டி இன்று, நாயக்கர் மகாலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Exit mobile version