வேலூர் மக்களவைத் தொகுதியில் அமைச்சர்கள் தீவிர பிரசாரம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இறுதிகட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அணைக்கட்டு பகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து கடை வீதியில் நடந்து சென்று அமைச்சர் சி.வி.சண்முகம், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து வாக்குசேகரித்தார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் பிரசாரத்தில் கலந்துகொண்டனர்.

இதேபோல் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஏராளமானோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் வேலுமணி தலைமையில் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் ராஜேஸ்வரி மற்றும் அரக்கோணம் மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version