திருச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

திருச்சியில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.

திருச்சி உறையூரில் பாண்டமங்கலம் தெற்குத் தெருவில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின. சொக்கலிங்கம், குப்புசாமி, பாக்கியம், மகிளாம்பாள், சின்ன பொண்ணு ஆகிய 5 பேரின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்தன. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்துத் தகவல் அறிந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் நிவாரண உதவிப் பொருட்களையும் வழங்கினர்.

Exit mobile version