அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் பிரசாரம்

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதிமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி, திறந்த வேனில் நின்றபடி அவர்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

Exit mobile version