கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு!!!

கொரோனாவின் காரணமாக, தனிமனித வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியவாணி முத்து நகரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன், தேசிய தொற்று நோய் தடுப்பு இயக்குனர் மனோஜ் முரக்கர், நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டு மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு சார்பில் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தனி மனிதரின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

Exit mobile version