சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு!

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக 200 படுக்கைகளுடன் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தப்ளிக் மாநாட்டில் பங்கேற்ற 1103 பேர் சோதனை செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர்களில் 658 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

Exit mobile version