அரசின் கட்டுப்பாட்டை மீறும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசின் கட்டுப்பாடுகளை மீறும் பயணிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழகத்திற்குள் வரும் பயணிகள், தங்களைத் தாங்களே தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால், சில பயணிகள் அதை மீறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்கள், சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்திற்குள் வந்த பயணிகளின் விவரங்கள், மாவட்ட நிர்வாகங்களுக்கும், காவல்துறைக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டை மீறும் பயணிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

Exit mobile version