மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படுமா என்பது குறித்து, ஆளுநரிடம் ஒப்புதல் பெறும் கால அளவைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு நிலையத்தில், “தேசிய தன்னார்வ ரத்ததான நாள் – 2020” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1 புள்ளி 6 சதவீதத்தில் இருந்து, 1 புள்ளி 3 சதவீதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து ஆளுநரின் ஒப்புதலை பொருத்தே முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Exit mobile version