ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமம் மற்றும் ஸ்மார்ட் ஆர்.சி புக் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமம் மற்றும் ஸ்மார்ட் ஆர்.சி புக் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் பழைய பிளாஸ்டிக் ஓட்டுனர் உரிமத்துக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்றும், பதிவு சான்று எனப்படும் ஆர்.சி.புக்கும் ஸ்மார்ட் கார்டு வடிவிலேயே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமத்தில் QR கோடு மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version