மழையால் நிரம்பிய குளத்தை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மழைக் காலத்தையொட்டி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அடப்பன் குளம், மழையால் நிரம்பியதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் நோய் தொற்று இல்லாத நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் கூறினார்.

Exit mobile version