அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

ஒட்டப்பிடாரம் தொகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து, அந்தோணியார் புரம், திரேஸ்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஆளுங்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் தேவையான திட்டங்கள் உடனடியாக நிறைவேறும் என்றும் பிற கட்சிகளுக்கு வாக்களிப்பது வீண் என்றும் குறிப்பிட்டார். அந்தோணியார்புரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version