சுகாதாரத்துறை குறித்த ஸ்டாலின் கருத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம்

காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு மருத்துவமனை குறித்து ஸ்டாலின் பொய்க் குற்றச்சாட்டுக் கூறி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் கூறியதுபோல் மர்மக் காய்ச்சல் என எதுவும் கிடையாது என்றும், டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Exit mobile version