திருமயம் அருகே விபத்தில் இறந்தவர்களின் உடல்களை தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை – விஜயபாஸ்கர்

திருமயம் அருகே பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பைபாஸ் சாலையில் லாரியும் வேனும் நேருக்குநேர் மோதிய விபத்தில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடந்த பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமயத்தில் விபத்துக்கால அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என்றார். படுகாயமடைந்த 5 பேருக்கும் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Exit mobile version