“சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுவோம்”

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் தொகுதியின் பிரச்சனைக்கான தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்தி லிங்கம் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட 9பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர், மூன்றாவது முறையாக தன்னை வெற்றிபெற வைத்த விராலிமலை மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும், தொகுதியின் நலனுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம் எனவும் உறுதியளித்தார்.

Exit mobile version