கட்டணமில்லா திருமணத்திற்கு தாமதமாக வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: மணமேடையில் காத்திருந்த மணமக்கள் !

கட்டணமில்லா திருமணம் காலை எட்டு முப்பது மணி அளவில் தொடங்கும் என அறிவித்த நிலையில் மணமக்கள் மண கோலத்தில் காலை 7 மணி முதலே மண மேடையில் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் அவர்களது உறவினரும் காலை முதலே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு தாமதமாக வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமண மண்டபத்தை திறந்து வைத்து அங்குள்ள மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

Exit mobile version