ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் தங்கமணி பிரசாரம்

வேலூர் மக்களவைத் தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

வேலூர் மக்களவை தொகுதிக்கு வருகின்ற 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் தங்கமணி தேர்தல் பணிமனை திறந்து வைத்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாந்து விட்டதாக தெரிவித்தார். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகம் வெற்றி பெறுவார் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்

Exit mobile version