மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதிக்கப்படுகிறது. இந்தநிலையில், தனது துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ள நிலையில், மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் சரோஜா, கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version